திருநெல்வேலியில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத் வழக்கில் முதியவருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(63). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரிடம் தாத்தா போல் பழகினார். அதனால் சிறுமியும் அவரை நம்பினார். ஒருகட்டத்தில் ரவி அந்தச் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுக்கத் தொடங்கினார். அதை வெளியில் சொல்லக் கூடாது எனவும் மிரட்டினார்.
ஆனால், இதையறிந்த சிறுமியின் உறவுக்காரப் பெண் ஒருவர், கடந்த 2017 அக்டோபர் 23-ம் தேதி திருநெல்வேலி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ரவியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் ரவிக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அன்புச்செல்வி தீர்ப்பளித்தார்.