அரியலூர்: வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் கொள்ளை

By பெ.பாரதி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர், என்எல்சியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது மனைவி ரேணுகா தேவியுடன் ஜெயங்கொண்டம் அடுத்த சின்னவளையம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று சென்றுள்ளார். இன்று (ஆக.23) காலை இருவரும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE