நெல்லை | அடகு கடையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பஜாரில் ஜவுளி கடையுடன் இணைந்த நகை அடகு கடையில் சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் மூன்று 3 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பஜாரில் ரெமன் என்பவர் நகை அடகு பிடிக்கும் கடையுடன் ஜவுளி கடையும் நடத்தி வருகிறார். இன்று அதிகாலை கடையின் பின்புறம் உள்ள ஜன்னல்களை உடைத்து சுமார் 60 லட்சம் மதிப்புள்ள நகைகளும் மூன்று லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இது பற்றி மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தடய அறிவியல் துறை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை வருகின்றனர். அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் அனைவரும் நகைகளை இங்கு அடகு வைத்துள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE