இட பிரச்சனை காரணமாக வழக்கறிஞர் வெட்டி படுகொலை @ நெல்லை 

By அ.அருள்தாசன்

நெல்லை: இடப்பிரச்சினை காரணமாக நெல்லையில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தைச் சார்ந்த வழக்கறிஞர் சரவணன்ராஜ். இவர் நெல்லை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சார்ந்த ஜான் என்பவரின் இடப்பிரச்சனை சம்பந்தமாக வழக்குகள் நடத்தி வருகிறார். இந்த நிலையில் வழக்கு சம்பந்தமான மற்றொரு பிரிவினர், சம்பந்தப்பட்ட இடத்தில் பொக்கலைன் இயந்திரம் மூலம் சமன் செய்து கொண்டிருந்த வழக்கறிஞர் சரவணன்ராஜை அரிவாளால் சரமரியாக வெட்டினர்.

இதில் படுகாயம் அடைந்த சரவணன் ராஜ், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து பெருமாள்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE