காவல் ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த குமரி போலீஸார்

By KU BUREAU

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில், காவல்உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி செல்வத்தை, போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

தமிழகத்தில் குற்ற நிகழ்வு களைத் தடுக்கும்வகையில் மாவட்டம்தோறும் ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே கரும்பாட்டூரை சேர்ந்த பிரபல ரவுடி செல்வம் (38) என்பவரை போலீஸார் தேடி வந்தனர்.

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் உள்ளன. செல்வம், குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றாலும், திருநெல்வேலி மாவட் டம் கூட்டப்புளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்தகுற்றச் சம்பவங்களில் அதிகமாக இவர் ஈடுபட்டதால், ‘தூத்துக்குடி செல் வம்’ என்றே போலீஸ் வட்டாரத்தில் இவர் அழைக்கப்பட்டார்

செல்வத்தை போலீஸார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் கன்னியாகுமரி பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில், சுசீந்திரம் காவல்நிலைய ஆய்வாளர் ஆதம் அலி, உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் மற்றும் போலீஸார் அஞ்சுகிராமம் பகுதியில் நின்ற செல்வத்தை பிடிக்க முயன்றபோது, அவர் தப்பிச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று காலை சுசீந்திரம் அருகே தேரூரில் செல்வம் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், அங்கு போலீஸார் விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்தனர். தப்பி ஓடும் எண்ணத்தில் செல்வம் கத்தியால் தாக்கியதில், உதவி ஆய்வாளர் லிபி பால் ராஜின் இடது கையில் கீறல் விழுந் தது. இதையடுத்து, செல்வத்தை நோக்கி ஆய்வாளர் ஆதம் அலி துப்பாக்கியால் சுட்டார். வலது காலில் காயம் ஏற்பட்டதால் தப்ப முடியாமல் நின்ற ரவுடி செல்வத்தை போலீஸார் பிடித்தனர்.

காயமடைந்த உதவி ஆய்வாளர், ரவுடி செல்வம் ஆகிய இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். மூன்று மாவட்டங்களில் கொலை மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி செல்வம் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE