பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி: சோகத்தில் முடிந்த சுற்றுலா!

By காமதேனு

சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தனர். நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் கூடிய மாணவிகள், சுற்றுலா பேருந்தில் ஏறியதும் அங்கிருந்து பேருந்து புறப்பட்டது. மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் அதில் பயணித்தனர். அந்த சுற்றுலா பேருந்து 500 மீட்டர் சென்றதும் அங்கிருந்த வளைவில் திரும்ப முயற்சித்தது.

உடல்

அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பேருந்துக்குள் சிக்கியிருந்த மாணவிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்றாம் ஆண்டு மாணவி ஸ்வேதா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து கல்லூரி மாணவிகளின் பெற்றோர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE