7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

By KU BUREAU

மும்பை: கண்டிவாலியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

தனது வகுப்பு முடிந்ததும் ஆசிரியர் தன்னை அழைத்து தகாத முறையில் தொட்டதாக, கண்டிவாலி பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 7-ம் வகுப்பு மாணவி தனது பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவரது பெற்றோருக்கு தலைமை ஆசிரியர் தகவல் தெரிவிக்க, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த போலீஸார், ஆசிரியருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாட்டில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில் ஆசிரியராலே பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE