விழுப்புரம் | அரசுப் பள்ளியில் கொடிக்கம்பத்தை உடைத்தெறிந்த சமூக விரோதிகள்

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் கொடிக்கம்பத்தை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த இரசமுதிரபாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நாளை மறுநாள் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் பள்ளி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தை சீர் செய்யும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் அங்கு சென்று சீர் செய்து வைத்திருந்த கொடிக்கம்பத்தினை உடைத்து எறிந்துள்ளனர்.

இன்று காலை ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று பார்த்த போது, கொடிக்கம்பம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கண்டங்கமங்கலம் காவல் நிலையாத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, நள்ளிரவில் கொடிக்கம்பத்தை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE