‘ஆசிரியர், தோழர்களே காரணம்’ - கடிதம் எழுதிவைத்துவிட்டு 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை

By KU BUREAU

மும்பை: 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அவர் தனது தற்கொலை குறிப்பில் ஒரு ஆசிரியரையும், சக மாணவர்கள் சிலரையும் குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பைக்கு அருகில் உள்ள கல்யாண் கிழக்கில் உள்ள ஒரு முக்கிய பள்ளியில் அந்த மாணவன் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சூழலில் அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்த போது அவரது குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், தற்கொலை குறிப்பு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதில், ஒரு ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் சிலரைக் குற்றம் சாட்டியுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இது தொடர்பாக போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE