இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்; இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்!

By காமதேனு

மத்திய பிரதேசம் மாநிலத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் துணிக்கடை ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் 3வது மாடியில் பராமரிப்புப்பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் நேற்று இரவு கட்டிடம் சரிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பலர் சிக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இடிபாடுகளில் சிக்கிய 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் இதில் சிக்கி இருக்கக் கூடும் என்பதால் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

இன்று கோலாகலமாக தொடங்குகிறது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா!

கார் ஓட்டக் கற்றுக்கொடுத்த மகன்; கிணற்றில் பாய்ந்து தந்தை உயிரிழப்பு!

செல்போன் விளையாட்டால் விபரீதம்; மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன்

பெரும் சோகம்... மாயமான 23 ராணுவ வீரர்கள்! தேடுதல் வேட்டை தீவிரம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE