திமுக முன்னாள் மண்டல தலைவரைக் கொல்ல முயற்சி.. அரிவாளுடன் சுற்றித்திரிந்தவர் கைது!

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் திமுகவின் முன்னாள் மண்டல தலைவரை கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் திமுக நிர்வாகி விகே குருசாமி. அதே பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அதிமுக நிர்வாகி ராஜபாண்டி. இவர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து முன்விரோதம் இருந்து வரும் நிலையில், இருதரப்பிலும் பழிக்குப்பழி கொலைகளும் தொடர்ந்து நடந்துள்ளது.

திமுக முன்னாள் நிர்வாகி விகே. குருசாமி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் வழக்குகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில், உடல்நிலை பாதித்ததால் கீரைத்துறையிலுள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ராஜபாண்டி தரப்பினர் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அவரை கொலை செய்யும் நோக்கில் அவரது வீட்டிருகே அரிவாளுடன் சுற்றித் திரிந்த காமராஜபுரம் குமரன் குறுக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (எ) மாட்டு மணியை கீரைத்துறை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்து அரிவாளைப் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE