ஆவடி பயிற்சி மையத்தில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

By KU BUREAU

ஆவடி பயிற்சி மையத்தில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் இந்திய விமானப்படை நிலையம் உள்ளது. இங்கு விமானப்படையில் சேரும் வீரர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி மையத்தில் 8வது டவரில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் காளிதாஸ் (55).

இந்த நிலையில் பணியில் இருந்த காளிதாஸ், துப்பாக்கியால் தன்னைத் தானே இன்று சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த முத்தா புதுப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது காளிதாஸ் தொண்டையில் மூன்று குண்டுகள் பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. காளிதாஸ் துப்பாக்கியால் எதற்காக சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE