'மரணத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்': பார்ட்டிக்கு பணம் தராததால் ஏற்பட்ட சண்டையில் விபரீதம்

By காமதேனு

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள டிஏவி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில், பிறந்தநாள் பார்ட்டி தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த பிஹாரைச் சேர்ந்த ஒரு மாணவர் உயிரிழந்தார்.

பிறந்தநாள் பார்ட்டிக்கு பணம் கொடுப்பது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் கிருஷ்ண குமார் யாதவ் என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், மற்றொரு மாணவரான அமன் குமார் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கல்லூரியின் டீன் சஞ்சீவ் நேவல், "பார்ட்டி தொடர்பாக இவர்களுக்குள் வாக்குவாதத்தில் தொடங்கிய தகராறு சண்டையாக மாறியது. சண்டையின் போது கைப்பிடிச் சுவர் உடைந்ததில், மூன்றாவது மாடியில் இருந்து மாணவர்கள் இருவரும் கீழே விழுந்தனர். இந்த மாணவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், மற்றொருவர் பலத்த காயமடைந்தார். பிஹாரைச் சேர்ந்த இந்த இரண்டு மாணவர்களும் பிஎஸ்சி படித்து வந்தனர்”என்று கூறினார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE