சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு தர்மஅடி

By கே.எஸ்.கிருத்திக்

விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம் அத்துமீறிய ஒருவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கப்பட்ட நபரைக் காப்பாற்றிய போலீஸார், அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளனர்.

தேனி மாவட்டம் வடுகப்பட்டியில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் சிலர் திடீரென கூச்சல் போட்டதால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்துள்ளனர். அப்போது நடுத்தர வயதுக்காரர் ஒருவர் அந்தச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று இப்படிச் செய்திருக்கிறார் அந்த ஆசாமி. உடனே அந்த நபரைப்பிடித்த அப்பகுதியினர், அவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தென்கரை போலீஸார் விரைந்து வந்தனர். விசாரணையில், அந்த நபரின் பெயர் பாண்டி(43) என்பதும், அவர் தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

போக்சோ சட்டத்தின்கீழ் அவரை கைதுசெய்த போலீஸார், பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த அவரை பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE