சேப்பாக்கம் எம்எல்ஏ அலுவலக நிகழ்ச்சியில் லட்ச ரூபாய் திருட்டு

By ரஜினி

சேப்பாக்கம் எம்எல்ஏ அலுவலகத்தில், உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட பொங்கல் பரிசளிப்பு நிகழ்ச்சியில் வட்டச் செயலாளரிடம் இருந்து லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ அலுவலகத்தில், இன்று காலை உதய நிதி ஸ்டாலின் கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகளும், கட்சியினரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக. சேப்பாக்கம் தொகுதி வட்டச் செயலாளர் வெங்கடேசன் லட்ச ரூபாயை தனது பாக்கெட்டில் வைத்திருந்திருக்கிறார். அப்போது கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வட்டச் செயலாளர் வெங்கடேசனிடம் இருந்த லட்ச ரூபாய் பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்ஹவுஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பதிவாகி உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்துக் கொள்ளையனை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE