குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்திய பெண்!

By காமதேனு

துபாயில் இருந்து விமானத்தில் ஹைதராபாத்துக்கு வந்த பெண் ஒருவர், தனது வயிற்றுக்குள் தங்கத்தை மறைத்துவைத்து கடத்தி வந்தது சுங்கத் துறை அதிகாரிகளை அதிரவைத்துள்ளது.

உலகத்தை அச்சுறுத்தி வரும் கரோனாவால் அனைத்து விமான நிலையங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமானப் பயணிகள் கடும் சோதனைக்குப் பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கரோனா கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

தங்கம்

இந்நிலையில், துபாயில் இருந்து ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெவ்வேறு விமானங்களில் வந்த 3 பெண் பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பெண் பயணி ஒருவர் தனது குடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 3 பெண்களிடம் இருந்து ரூ.72.80 லட்சம் ரொக்கம் மற்றும் 1,481 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE