13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பரமக்குடி ஆசிரியர் போக்சோவில் கைது

By காமதேனு

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பரமக்குடியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செயல்படும் அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்கள், ராமராஜ் மற்றும் ஆல்பர்ட். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இவர்கள் இருவர் மீதும் அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் பேசிய வகையிலும், தொட்டுப் பழகிய தொனியிலும், இந்த ஆசிரியர்களின் முறைகேடான நோக்கம் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது, பள்ளியில் பயிலும் மாணவிகளில் 13 பேர், ராம்ராஜ் மற்றும் ஆல்பர்ட்டுக்கு எதிராக பாலியல் புகார் அளித்தனர். இதையடுத்து போக்சோ பிரிவின்கீழ் ஆசிரியர் ராம்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட்டை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE