சிவகங்கை அருகே அடகு கடையில் துளையிட்டு ரூ.1 கோடி மதிப்புள்ள நகை பணம் திருட்டு

By இ.ஜெகநாதன்

சிவகங்கை: சிவகங்கை அருகே அடகு கடை சுவரில் துளையிட்டு ரூ.1 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தினை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

சிவகங்கை அருகே சிங்கினிப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் மதகுபட்டி பேருந்து நிலையம் அருகேயுள்ள வணிக வளாகத்தில் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்றிரவு (சனிக்கிழமை ) அடகு கடையின் பின்புறச் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் லாக்கரில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றனர்.

இது குறித்து மதகுபட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். அடகு கடை மற்றும் அப்பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளிகளைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE