அரியலூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு

By பெ.பாரதி

அரியலூர்: ஆண்டிமடம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் மடத்து தெருவைச் சேர்ந்தவர் கிரகோரி மகள் பிரண்சிகா (14). இவர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் அங்குள்ள திம்மகுட்டை ஏரியில் நேற்று மாலை குளிக்க சென்றுள்ளார். ஏரியில் குளித்துக் கொண்டிருந்த பிரண்சிகா திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியுள்ளார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு உறவினர்கள் உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஏரியில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE