மாதவரத்தில் ரூ.50 ஆயிரம் பணம், கால் கிலோ வெள்ளி திருட்டு!

By காமதேனு டீம்

சென்னை, பெரம்பூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (38). இவர், மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருகின்றார்.

நேற்று இரவு வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற தினேஷ், இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம், கால் கிலோ வெள்ளி நாணயம் ஆகியவற்றைக் காணவில்லை. இதுகுறித்து தினேஷ், மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் டைல்ஸ் கடையின் ஜன்னலை உடைத்து பணம், வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE