குளத்தில் குதித்து இளம்பெண் தற்கொலை?

By காமதேனு டீம்

வேளச்சேரி, தண்டீஸ்வரம் கோயில் குளத்தில் 30 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் இறங்கினார். இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் அவரை தடுத்துள்ளனர். அதையும் மீறி அந்தப் பெண் தண்ணீரில் இறங்கி சிறிது தூரம் சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்ற உடன், அந்தப் பெண் திடீரென தண்ணீரில் மூழ்கியதைப் பொதுமக்கள் கண்டனர். உடனே, வேளச்சேரி தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த அந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE