அது நேத்திக்கு.. இது இன்னிக்கு…

By காமதேனு

வங்கி மோசடியில் மாதம் ஒரு ஆள் என்று வரிசையாக அடுக்கலாம்போல இருக்கிறது! நீரவ் மோடி மோசடியே இன்னும் பேசித் தீராத நிலையில் அடுத்த வரவாக வந்திருக்கிறார் ‘கனிஷ்க் ஜூவல்லர்ஸ்’ பூபேஷ்குமார் ஜெயின்!

ரூ.824 கோடி கடனுக்காக 14 வங்கிகள் பூபேஷ்குமாரை இனி சுற்றி வர வேண்டும். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 2007-ல் தொடங்கப்பட்ட ‘கனிஷ்க்’ நிறுவனத்துக்கு, 2008-ல் ஸ்டேட் வங்கி முதலில் கடன் கொடுத்தது.

ஒவ்வொரு ஆண்டும் விற்பனை மற்றும் லாபத்தை அதிகரித்துக் காட்டி, அடுத்தடுத்த வங்கிகளில் கடன் வாங்கியிருக்கிறார். எந்தச் சரிபார்ப்பும் இல்லாமல், அவர் சொல்லியதை அப்படியே நம்பி ஏமாந்து நிற்கின்றனர் வங்கி அதிகாரிகள். பதைபதைத்து நிற்கிறது பொதுஜனம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE