24 வருடங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் பிரசாந்த்

By KU BUREAU

நடிகர் பிர​சாந்​துக்கு நேற்று பிறந்த நாள். அதை முன்​னிட்டு அவரது புதிய படம் பற்றிய அறி​விப்பு நேற்று வெளி​யிடப்​பட்​டது. அவரது 55-வது படமான அதை, ஹரி இயக்​கு​கிறார். பிர​சாந்​தும் ஹரி​யும் இணைந்து ஏற்​கெனவே 2002-ம் ஆண்டு ‘தமிழ்’ படத்​தில் இணைந்​திருந்​தனர். 23 வருடங்​களுக்​குப் பிறகு மீண்​டும் இணைந்​துள்​ளனர்.

இதற்கான விழா​வில் பிர​சாந்த் பேசும்​போது, “ஹரி சாரும் நானும் சேர்ந்து மீண்​டும் இந்​தப் படத்​தில் இணைந்​திருக்​கிறோம். இது மிகப்​பெரிய படமாக இருக்​கும். பார்​வை​யாளர்​களின் எதிர்​பார்ப்​பைப் பூர்த்தி செய்​யும் வித​மாக​வும் இன்​றைய தலை​முறைக்​கும் அடுத்த தலை​முறை ரசிகர்​களுக்​கும் பிடித்த மாதிரி இந்​தப் படம் இருக்​கும்.

கதை​யுடன் ஃபேமிலி சென்​டிமென்ட்​டும் இருக்​கும். வழக்​க​மாக ஹரி சார் படங்​களில் இருப்​ப​தைப் போல இந்​தப் படத்​தின் திரைக்​கதை​யும் வேக​மாகவே இருக்கும்” என்​றார்.

இயக்​குநர் ஹரி பேசும்​போது, “நான் சரண் இயக்​கிய ‘பார்த்​தேன் ரசித்​தேன்’ படத்​தில் உதவி இயக்​குந​ராக பணி​யாற்​றிய போது,
அதில் நடித்த பிர​சாந்​திடம், கிடைக்​கும் நேரத்தில் சின்ன சின்ன காட்​சிகளாகச் சொல்​வேன். அந்த நம்​பிக்​கை​யில்​ என முதல் பட வாய்ப்பை ‘தமிழ்’ மூலம் கொடுத்த அவருக்கு இப்​போது நன்​றி.

2001-ம் ஆண்டு பிர​சாந்த் பிறந்த நாளான இதே தினத்​தில்​தான் ‘தமிழ்’ படத்​தின் பூஜை நடந்​தது. 24 வருடங்​களுக்​குப் பிறகு இதே
தேதி​யில் புதிய படத்​துக்​காக இணைந்திருக்​கிறோம்” என்​றார். இந்​தப் படத்தை ஸ்டார் மூவிஸ் சார்​பில் நடிகர்​ தி​யாகராஜன்​ தயாரிக்​கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE