பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். இவர்கள் குடும்பத்தில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக, பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். இதையடுத்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி நேற்று மனுதாக்கல் செய்தனர். இந்த மனு, சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி. பிரகாஷ், சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகி மனமுவந்து பிரிவதாகத் தெரிவித்தனர்.
அவர்கள் சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜரானார். அதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். பின், இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.