தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், நடிப்போடு படம் இயக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ‘பா.பாண்டி’, ‘ராயன்’ படங்களை இயக்கிய அவர், சமீபத்தில் வெளியான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்?’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.
அடுத்து, ‘இட்லிக் கடை’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இதில் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண் உட்பட பலர் நடித்துள்ளனர். இதற்கிடையே ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மே’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அஜித் நடிக்கும் படத்தை தனுஷ் இயக்க இருப்பதாகவும் அதை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தனுஷ் தரப்பில் விசாரித்தபோது, இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் முடிவாகவில்லை என்றனர்.