நடிகர் யோகிபாபு இப்போது ‘அக்யூஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஏலகிரியில் நடந்து வந்தது. படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு நேற்று அதிகாலை திரும்பினார். வாலாஜாபேட்டை அருகே யோகிபாபு வந்த கார் விபத்தில் சிக்கியதாகவும் அவர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் அதை மறுத்துள்ள யோகிபாபு, “எனக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை, நான் நலமாக இருக்கிறேன். தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்புக்காக வந்திருந்த ஒரு கார், விபத்தில் சிக்கியது. அதில் நான் பயணிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் உதயாவும் இதை மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “நான், யோகிபாபு, அஜ்மல் ஆகியோர் ஒரே காரில்தான் வந்தோம். படப்பிடிக்காக வந்த மற்றொரு கார்தான் விபத்தில் சிக்கியது. யோகிபாபுவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை” என்றார்.