தீயாய் பரவிய விவாகரத்து வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த ‘சுந்தரி’ சீரியல் நடிகை!

By KU BUREAU

சின்னத்திரை நடிகை கேப்ரியல்லா தனது கணவரைப் பிரிந்து விட்டதாக செய்தி பரவிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

சமூகவலைதளங்களில் பிரபலமானவர் கேப்ரியல்லா. இந்த பிரபல்யத்தைப் பயன்படுத்தி சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் பின்னர், சீரியலில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’ சீரியலில் கதாநாயகியாக நடித்தது இவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது. குறும்படங்களில் கேப்ரியல்லா பணிபுரிந்த காலத்திலேயே அவருடன் கேமரா மேனாக பணியாற்றிய சுருளி என்பவரையே காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கடந்த சில நாட்களாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சமூகவலைதளங்களில் செய்தி பரவியது. இதற்கெல்லாம் கேப்ரியல்லா தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தனது கணவர் சுருளியுடன் ஜோடியாக எடுத்தப் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE