இளையராஜா கொடுத்த மறக்க முடியாத பரிசு: சுவாரஸ்யம் பகிர்ந்த பிரேம்ஜி மனைவி!

By KU BUREAU

இளையராஜா தங்கள் திருமணத்திற்கு வரவில்லை என்பது நெகட்டிவாக பேசப்பட்டது குறித்து நடிகர் பிரேம்ஜி மனைவி இந்து கூறியிருக்கிறார்.

நடிகர் பிரேம்ஜி திருமணம் கடந்த ஜூன் மாதம் திருத்தணி கோயிலில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரேம்ஜியின் பெரியப்பாவான இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொள்ளவில்லை என்பது நெகட்டிவாக பேசப்பட்டது.

இது பற்றியும் அவர் கொடுத்த ஸ்பெஷலான பரிசு குறித்து ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். “இளையராஜா அங்கிள் எங்கள் திருமணத்திற்கு வரவில்லை என்று நெகட்டிவாக பேசினார்கள். எங்கள் திருமணம் கோயிலில் நடந்தது. விஷயம் கேள்விப்பட்டதும் நிறைய கூட்டம் சேர்ந்து விட்டது.

அதனால், அவரால் வரமுடியவில்லை. ஆனால், திருமணம் முடிந்ததும் எங்கள் இரண்டு பேரையும் அழைத்து மனதார வாழ்த்தி ஆசீர்வாதம் செய்தார். எங்களுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பரிசு ஒன்றையும் கொடுத்தார். அதுபற்றி வெளியே சொல்ல மாட்டோம். அப்படியான சிறப்பு பரிசு அது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE