பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சிவகார்த்திகேயன்: கிளம்பிய சர்ச்சை!

By KU BUREAU

பிக்பாஸ்8 தமிழ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் நுழைந்திருக்கிறார்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் மூன்றாவது வாரத்தை நெருங்கி இருக்கிறது. போட்டி சற்றே விறுவிறுப்பாகியுள்ள நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் நுழைந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படம் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகிறது. படத்தை புரோமோட் செய்வதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் போட்டியாளர்களுக்கு ‘அமரன்’ படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை போட்டு காண்பித்தார். அதேபோல, இந்தப் படம் குறித்து மேஜர் முகுந்த் மனைவி மற்றும் அவரது பெற்றோர் தன்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களையும் போட்டியாளர்களிடம் கூறினார்.

பின்னர், போட்டியாளர்கள் அனைவருக்கும் தேசியக்கொடி பேட்ஜ் கொடுக்கப்பட்டது. சிவகார்த்திகேயனுடன் போட்டியாளர்கள் இருக்கும்போது இந்த பேட்ஜ் அனைவரும் அணிந்திருந்தார்கள். ஆனால், இந்தக் காட்சிகளை ஒளிபரப்பியபோது தேசியக்கொடி ப்ளர் செய்யப்பட்டது இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ரியாலிட்டி நிகழ்ச்சியில் தேசியக்கொடியை ஒளிபரப்புவதில் என்ன தவறு இருக்கிறது இதற்கு விஜய்சேதுபதி விளக்கம் கொடுக்க வேண்டும் என இணையவாசிகள் சொல்லி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE