‘மெய்யழகன்’ ஓடிடி வெளியீட்டில் மாற்றம்!

By ஸ்டார்க்கர்

‘மெய்யழகன்’ படத்தின் ஓடிடி வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. செப்டம்பர் 27-ம் தேதி வெளியான இப்படத்தினை 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. விமர்சன ரீதியாக வரவேற்பினைப் பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.

இதனிடையே, நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 27-ம் தேதி ‘மெய்யழகன்’ வெளியாகும் என அறிவித்தார்கள். அதுவும் விமர்சனத்தை முன்வைத்து வெளியீட்டுக்கு பின்பு சில காட்சிகளை படத்திலிருந்து நீக்கினார்கள். அந்தப் பதிப்பே ஓடிடியில் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது திடீரென்று படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னதாக அக்டோபர் 25-ம் தேதியே ‘மெய்யழகன்’ வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு இணையவாசிகள் சிலர் ஓடிடியில் படத்தின் UNCUT VERSION-ஐ வெளியிட வேண்டும் என படக்குழுவினருக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE