“சக்சஸ் மீட்டை பார்த்து நாட்கள் ஆகிவிட்டன” - ஜீவா

By KU BUREAU

ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா நடிப்பில் கடந்த 11-ம் தேதி வெளியான படம், ‘பிளாக்’.அறிமுக இயக்குநர் ஜி.கே. பாலசுப்ரமணி இயக்கிய இந்த சயின்ஸ் பிக்‌ஷன் த்ரில்லர் படத்தை பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது.

நடிகர் ஜீவா பேசும்போது, “ இந்தப் படத்தில் ஒப்பந்தமான பிறகு ஒரு முறை விமானத்தில் நடிகர் கார்த்தியுடன் பயணித்தேன். பொட்டென்ஷியல் நிறுவனத் தயாரிப்பில் நடிக்கிறேன் என்றதும் ‘அவர்கள் சாதாரணமாக ஒரு படத்தை வெளியிட்டு விட மாட்டார்கள், அனைத்து தரப்பிலும் விவாதித்து, பார்த்துப் பார்த்துசெதுக்கிதான் ரிலீஸ் செய்வார்கள்’ என்று சொன்னார். அதன்படி அவர்கள் ஸ்கிரிப்ட்டுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

சில பேர் கதை சொல்லும்போது லவ் ஸ்டோரியாக இருக்கும். படமாக எடுக்கும் போது சைக்கோ லவ் ஸ்டோரியாக மாறிவிடும். மேலும் எங்களைப் போன்ற நடிகர்களுக்குப் பாடல் வேண்டும், சண்டைக்காட்சி வேண்டும் என விநியோகஸ்தர்கள் தரப்பி லிருந்தும் அழுத்தம் இருக்கும். ராம், கற்றது தமிழ் போன்ற படங்கள், ஒரு நடிகராக என்னை மாற்றினாலும் திரையரங்குகளில் சென்று பார்க்கும் போது அதற்கான வரவேற்பு குறைவாகவே இருந்தது. அதனால்தான் கொஞ்சம் ரூட்டை மாற்றி ஈ, கோ போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

‘பிளாக்’ படத்தின் 2-வது பாகத்தை எப்போது எடுப்பீர்கள் என கேட்கிறார்கள். இந்த நிறுவனம்என்னிடம் 2 படங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அதனால் அவர்கள் எடுத்துதான் ஆக வேண்டும். இதுபோன்ற சக்சஸ் மீட்டை பார்த்து எனக்கு ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இதற்காகவே இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ண வேண்டும்” என்று கூறினார். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் பாலசுப்ரமணி, நடிகர் விவேக் பிரசன்னா உட்பட படக் குழுவினர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE