பிக்பாஸ் வீட்டைச் சூழ்ந்த மழை வெள்ளம்? - போட்டியாளர்கள் நிலை என்ன?

By KU BUREAU

சென்னை: பிக்பாஸ் வீட்டை மழைநீர் சூழ்ந்திருக்கிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் வரும் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களிலும் சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடி வருகிறது. ஒருசில இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது.

இதேபோல, பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் மழைநீர் புகுந்திருக்கிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த சீசன்களும் இதேபோல மழைக்காலமான அக்டோபரில்தான் தொடங்கியது. அப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த வருடமும் பிக்பாஸ் வீட்டிற்கான செட் சென்னையில் அமைக்கப்பட்டிருப்பதால் அங்கும் மழைநீர் உள்ளே செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. அப்படியான இக்கட்டான சூழ்நிலை வந்தால் இந்த வருடமும் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட இருக்கிறார்கள். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பிக்பாஸ் நிகழ்ச்சி தரப்பில் எடுக்கப்பட்டிருக்கிறது. வரும் நாட்களில் போட்டியாளர்கள் நிலை என்ன என்பதும் உறுதியாகிவிடும். பிக்பாஸ் வீடு செட் அமைக்கும்போதே 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE