முன்னாள் மனைவி கொடுத்த புகார்: நடிகர் பாலா கைது!

By KU BUREAU

முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இயக்குநர் சிறுத்த சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா சமூக ஊடகங்களில் தனது முன்னாள் மனைவி அம்ருதா மற்றும் மகளைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாக பேசியிருக்கிறார். இதனால், சிறுவர் நீதி சட்டத்தின் கீழ் அவர் மீது முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நடிகர் பாலாவிடம் இருந்து விவாகரத்துப் பெற்ற அம்ருதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் கோபி சுந்தரை காதலித்து திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அம்ருதா மற்றும் அவரது மகளை பின்தொடர்ந்து சென்று நடிகர் பாலா துன்புறுத்தி இருக்கிறார். இதனால், அம்ருதா கொடுத்தப் புகாரின் அடிப்படையில் எடப்பள்ளி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு கடவந்திரா காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

அம்ருதாவின் மகளும் இந்த விவகாரம் பற்றி பாலாவை கண்டித்து சமூகவலைதளங்களில் பேசியிருந்தார். இந்த வழக்கில் பாலாவின் மேலாளர் ராஜேஷ் மற்றும் நண்பர் உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE