பிக்பாஸ்8: வெளியேறிய ரவீந்தர் - இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியது யார் யார்?

By KU BUREAU

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் முதல் வாரம் ரவீந்தர் வெளியேறி இருந்தார். இதைத் தொடர்ந்து இந்த வாரம் யார் நாமினேஷனில் சிக்கியிருக்கிறார்கள் என்பது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்8 தமிழ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் குறைந்த மக்கள் ஓட்டுகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். சாச்சனாவை திட்டமிட்டு முதல் நாளே வெளியேற்றியது, பிராங்க் என்ற பெயரில் பிக்பாஸ் இல்லத்தில் நடந்த களேபரம் போன்றவை அவர் வெளியேற காரணங்களாய் அமைந்தது. இதுமட்டுமல்லாது, பிக்பாஸ் இல்லத்திலேயே அதிக சம்பளம் வாங்குபவர்களில் ஒருவராய் ரவீந்தர் இருக்கிறார். அதாவது ஒரு நாளுக்கு அவருக்கு ரூ. 50000 சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது.

இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில் ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் நாமினேட் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். யார் எல்லாம் நாமினேஷனில் சிக்கியிருக்கிறார்கள் என்ற பட்டியல் புரோமோவில் வெளியாகியுள்ளது. அதன்படி, அதிக வாக்குகள் பெற்று ஜெஃப்ரிதான் முதலிடத்தில் உள்ளார். இதற்கடுத்து ரஞ்சித், செளந்தர்யா மற்றும் சாச்சனா ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். முழுப்பட்டியல் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் இடம்பெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE