ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து: பதில் கொடுத்த நித்யா மேனன்!

By KU BUREAU

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் பாலியல் புகாரில் சிக்கியதால் தேசிய விருது ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியானது ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது நடிகை நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டது. அதுபோலவே, இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘மேகம் கருக்காதா...?’ பாடலின் நடன அமைப்பிற்காக நடன இயக்குநர்கள் சதீஷ் மற்றும் ஜானி மாஸ்டர் இருவருக்கும் கூட்டாக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

நாட்டின் எழுபதாவது தேசிய விருதுகள் இன்று மாலை 4 மணியளவில் வழங்கப்படவுள்ளது. தேசிய விருது அறிவிக்கப்பட்ட ஜானி மாஸ்டர் பாலியல் புகாரில் சிக்கி சிறை சென்றதால் அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி சமீபத்தில் நடிகை நித்யா மேனனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இந்த விஷயம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால், அந்தப் பாடல் தேசிய விருது கொடுக்கத் தகுதியான நடன அமைப்பு உள்ளதுதான்” எனக் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE