'தங்கலான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாவதில் சிக்கல்?

By KU BUREAU

சென்னை: நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ படம் ஓடிடியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டப் பலர் நடித்திருந்த ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் வெளியாகி ஒரு மாதம் கடந்திருக்கிறது. ஓடிடி தளத்தில் எப்போது படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அதில் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, திருவள்ளூரைச் சேர்ந்த பொற்கொடி என்பவர்தான் ‘தங்கலான்’ படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்.

இந்த புகார் மனுவில் ‘தங்கலான்’ படத்தில் வைணவர்களை அவமதிக்கும் விதமாகவும் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களை உயர்த்தி பேசியும் காட்சிகள் இருப்பதாகவும், இதனால் ஓடிடியில் வெளியாகும்போது இருதரப்பினருக்கும் பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது என்றும் கூறியிருக்கிறார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE