பிக்பாஸ் தமிழ் 8: முதல் நாளே வெளியேறிய போட்டியாளர் யார்?

By KU BUREAU

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் முதல் நாளே வெளியேற்றப்பட்டிருக்கும் போட்டியாளர் யார் என்பது குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நேற்று மாலை தொடங்கியது. இந்த சீசனில் கமல்ஹாசனுக்குப் பதிலாக விஜய்சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவிந்தர், நடிகர்கள் அருண், அர்னவ், தர்ஷா குப்தா, பவித்ரா ஜனனி, தர்ஷிகா, சாச்சனா, ரஞ்சித், தீபக், சுனிதா, ஆர்.ஜே. ஆனந்தி, ஜெஃப்ரே, விஜே முத்துக்குமரன், செளந்தர்யா, அன்ஷிதா, விஜே ஜாக்குலின், சத்யா, விஜே விஷால் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த சீசன் ஆண்கள் vs பெண்கள் என்ற தீமை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதன்படி ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் பிக்பாஸ் எட்டாவது சீசனை விளையாட உள்ளனர்.

இந்த முறை ‘ஆளும் புதுசு; ஆட்டமும் புதுசு’ என்பதால் முதல் நாளே அதாவது நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்திலேயேஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் சத்யா, ஜாக்குலின், ரவீந்தர், அர்னவ், சாச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி சாச்சனா முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டிருக்கிறார். பிக்பாஸ் இல்லத்திலேயே இளம் போட்டியாளராக சாச்சனா உள்ளதால் அவரை அதிக பேர் நாமினேட் செய்து வெளியேற்றி இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், ‘அன்ஃபேர்’ என பிக்பாஸ் பார்வையாளர்கள் சொல்லி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE