‘டாடா’ இயக்குநருடன் இணையும் ஜெயம் ரவி!

By KU BUREAU

கவின், அபர்ணா தாஸ் நடித்த ‘டாடா’ படத்தை இயக்கியவர் கணேஷ் கே பாபு. இவர் அடுத்து இயக்கும் படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். அவரின் 34-வது படமான இதை, ஸ்கிரீன் சீன் மீடியா சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார். இவர், ‘இருட்டு', ‘தாராள பிரபு', ‘எம்ஜிஆர் மகன்', 'இடியட்', ‘சாணி காயிதம்', ‘அகிலன்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்.

இப்போது ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ படத்தைத் தயாரித்துள்ளார். குடும்ப கதையை கொண்ட இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. அடுத்து, கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE