‘பிரதர்’ படத்திற்குப் பிறகு ‘டாடா’ இயக்குநருடன் கைகோக்கும் நடிகர் ஜெயம் ரவி!

By KU BUREAU

சென்னை: ‘பிரதர்’ படத்திற்கு அடுத்து ’டாடா’ படப்புகழ் இயக்குநர் கணேஷ் பாபுவுடன் கைகோப்பதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.

இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 'பிரதர்' திரைப்படம் இந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இதற்கடுத்து ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். பெரும் பொருட்செலவில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இதன் அறிவிப்பு போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இதில் நடிக்க உள்ள முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்கும். தனது மனைவியுடனான விவாகரத்துப் பிரச்சினைக்குப் பிறகு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ‘பிரதர்’, ‘ஜெ.ஆர்.34’ மற்றும் ‘தனி ஒருவன்2’ ஆகிய படங்களை லைன் - அப்பில் வைத்திருக்கிறார் ஜெயம் ரவி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE