என்னை அடுத்த விஜயசாந்தின்னு ரஜினிகாந்த் சொன்னார் - நடிகை துஷாரா விஜயன் நெகிழ்ச்சி!

By KU BUREAU

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தன்னை அடுத்த விஜயசாந்தி என சொன்னார் என நடிகை துஷாரா விஜயன் ‘இந்து தமிழ் திசை’ யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.

’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் இந்த வாரம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து நடிகை துஷாரா விஜயன் பேசியுள்ளார். “இயக்குநர் ஞானவேல் ‘வேட்டையன்’ படத்திற்காக என்னை அணுகியபோது நிச்சயம் எனக்கு நல்ல கதாபாத்திரம் இருக்கும் என்பது தெரியும். அதன் பின்னர்தான் ரஜினி சார் படத்தில் நான் இருக்கிறேன் என்பது தெரிய வந்தது. முதல்நாள் ரஜினி சாரைப் பார்க்கப் போகிறேன் என்றதும் எனக்கு காய்ச்சலே வந்துவிட்டது. ரஜினி சாரிடம் ஞானவேல் சார் இந்த விஷயத்தை சொன்னதும் அவர் என்னைப் பார்த்து, “ஏன் கண்ணா, பயமா? இல்ல மரியாதையா?” என சிரித்துக் கொண்டே கேட்டார்.

நான் நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படங்கள் அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னை அடுத்த விஜயசாந்தி எனப் பாராட்டினார். ‘ராயன்’ படப்பிடிப்பில் மருத்துவமனை ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பு சமயத்தில்தான் எனக்கு ‘வேட்டையன்’ வாய்ப்பு வந்தது. தனுஷ் சாரிடம் அப்போது விஷயத்தை சொன்னபோது, ‘உன் மீது பொறாமையாக இருக்கிறது’ என்று சிரித்துக் கொண்டே வாழ்த்தினார்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE