வடிவேலு வெற்றிக்கு பின்னால் நானும் இருந்தேன்: உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து பதில்மனு

By KU BUREAU

சென்னை: நடிகர் சிங்கமுத்துக்கு எதிராக நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘யூடியூப் சேனல்களுக்கு அளி்த்த பேட்டியில் சிங்கமுத்து என்னைப் பற்றி அவதூறாக பேசியுள்ளார். எனவே ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு தர வேண்டும். என்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்' என கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நடிகர் சிங்கமுத்துதரப்பில் தாக்கல் செய்யப்பட் டிருந்த பதில் மனுவில் கூறி யிருப்பதாவது:

நடிகர் வடிவேலு எனக்கு எதிராக கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. பல உண்மைத் தகவல்களை மறைத்து அவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

உள்நோக்கம் கிடையாது: நான் வடிவேலுவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கத்துடன் ஒருபோதும் பேசவில்லை. எனதுசொந்த திரைத்துறை அனுபவத் தில், திரைத்துறையைச் சேர்ந்த வர்களின் பொதுப்படையான கருத்துகளை மட்டுமே தெரிவித்து இருந்தேன்.

இந்த விவகாரம் தொடர்பாக வடிவேலு தரப்பில் எனக்கு அனுப்பப்பட்ட வழக்கறிஞர் நோட்டீ ஸூக்கு, என்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பதில் நோட்டீஸ் அனுப்பியபோதும், என்னை துன்புறுத்தும் நோக்கில் நடிகர் வடிவேலு இந்த வழக்கை எனக்கு எதிராக தொடர்ந்துள்ளார்.

வடிவேலு உட்பட பல்வேறு நடிகர்களுக்கு நகைச்சுவை பாத்திரங்களுக்கான வசனங்களை நான் எழுதி கொடுத்துள்ளேன். நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப் பின்னால் நானும் இருந்துள்ளேன். அதன் காரணமாகவே அவருக்கு பணமும், புகழும் சேர்ந்தது.

பழிவாங்கும் நோக்கில்... திரையுலகில் எனக்கும் நல்ல மதிப்பும், மரியாதையும் உள்ளது. நான் மற்ற நிறுவனங்களின் திரைப்படங்களில் நடிக்க என்னை வடிவேலு அனுமதிக்கவில்லை. என்னைப்பற்றி தவறான தகவல்களைப் பல தயாரிப்பாளர்களிடம் கூறி எனக்கான திரைப்பட வாய்ப்புகளை அவர்தான் கெடுத்தார்.

சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்க அவர் என்னைப் பயன்படுத்திக் கொண்டார். பல நகைச்சுவை நடிகர்களுக்கு நான் வசனம் எழுதிகொடுத்ததால் என்னை பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். நான் வாங்கி கொடுத்த ஒரு சொத்தில் வில்லங்கம் இருந்ததால் அதைப்பயன்படுத்தி எனக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தார்.

ஆனால் அந்த சொத்தை வாங்கியதால் அவருக்கு எந்த நிதியிழப்பும் ஏற்படவில்லை. ஆனால் ரூ. 7 கோடியை ஏமாற்றி விட்டதாக அவர்எனக்கு எதிராக அளித்த புகார் காரணமாக இன்று வரை அந்த வழக்கைஎதிர்கொண்டு வருகிறேன். நான்வடிவேலுவுக்கு எதிராக எந்தவொரு அவதூறு கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

நான் அளித்த பேட்டியை அவர் முழுமையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. தற்போதுஅந்த பேட்டி யூடியூப் வலைதளத் தில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டது. இனிவரும் காலங்களி்ல் அவரைப்பற்றி பேசக்கூடாது என்ற நோக்கத்துடன் எனக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்துள்ள இந்தவழக்கை அபராதத்துடன் தள்ளு படி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந் தார். இந்த வழக்கின் விசாரணையைநீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் அக்.24-க்கு தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE