காலில் குண்டு பாய்ந்து நடிகர் கோவிந்தா காயம்

By KU BUREAU

பிரபல இந்தி நடிகர் கோவிந்தா (60). சிவசேனா பிரமுகருமான இவர், மும்பை ஜுஹுவில் வசித்து வருகிறார். இவர் கொல்கத்தா செல்வதற்காக நேற்று அதிகாலை 4.45 மணிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி உள்ளது. அதை அலமாரியில் வைத்தபோது கீழே விழுந்து தவறுதலாக அவர் காலில் குண்டு பாய்ந்தது.

உடனடியாக தனது மானேஜர் மற்றும் மனைவிக்கு இதுபற்றி சொன்னார். அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற அவர்கள் கோவிந்தாவை மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அவரது காலில் பாய்ந்த குண்டு அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக அவரது மானேஜர் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து கோவிந்தா வெளியிட்டுள்ள ஆடியோவில், எனது ரசிகர்கள் மற்றும் கடவுளின் ஆசியுடன் இப்போதுநலமாக இருக்கிறேன். மருத்துவர் அகர்வால், எனது நலனுக்காகப் பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE