தன்னைத் தானே சுட்டுக் கொண்ட பிரபல நடிகர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

By KU BUREAU

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா தன்னைத் தானே தவறுதலாக துப்பாக்கியில் சுட்டுக் கொண்டதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டு மும்பையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

'ஹாலிடே’, ‘கில் தில்’ உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகர் கோவிந்தா (61). அரசியலிலும் ஆர்வம் கொண்ட இவர் சிவசேனா கட்சியிலும் உள்ளார். இன்று அதிகாலை கொல்கத்தா கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்த நடிகர் கோவிந்தா தன்னுடைய உரிமம் பெற்ற துப்பாக்கியை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்து அவரது காலில் குண்டு துளைத்திருக்கிறது.

உடனடியாக, அவரது குடும்பத்தினர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது காலில் பாய்ந்த குண்டை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். இப்போது கோவிந்தாவின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மேனேஜர் சாஷி சின்ஹா வட இந்திய ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE