’தோழா’ படத்தை நினைவு கூர்ந்த நாகர்ஜூனா: கார்த்தியின் ’மெய்யழக’னுக்கு பாராட்டு!

By KU BUREAU

’மெய்யழகன்’ திரைப்படம் தனக்கு ‘தோழா’ படத்தின் நினைவுகளை கண்முன் கொண்டு வந்ததாக நடிகர் நாகர்ஜூனா நெகிழ்ந்திருக்கிறார்.

’96’ படப்புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான விமர்சனங்களைக் கொடுத்து வருகின்றனர். இருந்தாலும் படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம் என்று எழுந்த விமர்சனங்களை அடுத்து 18 நிமிடங்கள் படத்தின் நீளம் குறைக்கப்பட்டிருக்கிறது. ’மெய்யழகன்’ படத்தைப் பார்த்த நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

அதில், ‘அன்புள்ள கார்த்தி, உங்கள் ‘மெய்யழகன்’ படம் நேற்று பார்த்தேன். நீங்களும் அரவிந்த் சாமி சாரும் நன்றாக நடித்திருக்கிறீர்கள். படம் முழுக்க நான் சிரித்துக் கொண்டே இருந்தேன். அதே புன்னகையோடுதான் நான் உறங்கவும் சென்றேன். என் சிறுவயது நியாபங்கள் நிறைய என் கண் முன் வந்து போனது. அதோடு நாம் இணைந்து நடித்த ‘தோழா’ படமும் நினைவுக்கு வந்தது. அனைவருக்கும் இந்தப் படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி. படக்குழுவுக்கு வாழ்த்துகள்!’ என்று பதிவிட்டிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE