கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

By காமதேனு

நடிகை ஐஸ்வர்யா ராய் கையில் கட்டு போட்ட நிலையில், தனது மகளுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நேற்று இரவு கிளம்பி சென்ற நிலையில், ’ஐஸ்வர்யாவுக்கு கையில் என்ன ஆச்சு?’ என ரசிகர்கள் பதறிப் போயுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் 77வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்ட நிலையில், பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பல பிரபலங்களும் வருடா வருடம் படையெடுத்து சென்று வருகின்றனர். கேன்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்ப்பட்டை அலங்கரிக்கும் பிரபலங்களில் நடிகை ஐஸ்வர்யா ராயும் ஒருவர்.

வருடாவருடம் தவறாமல் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அவருடைய பிரத்யேக உடையைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில், நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, தனது மகள் ஆராத்யாவுடன் மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு கிளம்பி சென்றார் ஐஸ்வர்யா ராய்.

அப்போது, கையில் அடிபட்டு கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராயைப் பார்த்த ரசிகர்கள் பதறிப் போயுள்ளனர். ‘அச்சச்சோ...ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு? அவர் சீக்கிரமே குணமாக வேண்டும்’ என்று இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக அவரது நட்பு வட்டாரம் தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா, இந்த வருடமும் மிஸ் ஆகக் கூடாது என்பதற்காக கையில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் கிளம்பியிருக்கிறார்.

கேன்ஸ் விழாவில் முன்பு ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டபோது...

ஐஸ்வர்யாவுடன் மகள் மட்டுமே வந்திருக்க, கணவர் அபிஷேக் வரவில்லையா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!

கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!

26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர உத்தரவு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE