#Election2024: ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

By காமதேனு

நடிகர் சூர்யா தனது தம்பி கார்த்தி, அப்பா சிவக்குமார் மற்றும் அம்மா லட்சுமி என குடும்பத்துடன் வந்து வாக்கினைப் பதிவு செய்தார். ஆனால், அவருடன் நடிகை ஜோதிகா மட்டும் மிஸ்ஸிங்!

இன்று மதியம் 12.45 மணியளவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் தி.நகரில் உள்ள இந்தி பிரச்சார சபையில் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர். இவர்களுடன் ஜோதிகா வராதது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் அவர் மும்பையில் வீடு வாங்கி, அங்கேயே செட்டிலாகி இருப்பதால் இந்த தேர்தலில் வாக்களிக்க வரவில்லை எனக் கூறி வருகின்றனர்.

முன்னதாக, நடிகர் விஜய் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பினார். நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அங்கு கூடியிருந்த ரசிகர்களின் தள்ளுமுள்ளு கூட்டத்தால் திணறிப்போனார் விஜய்.

காலை முதலே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் எனப் பிரபலங்கள் பலரும் உற்சாகமாக பொதுமக்களுடன் தங்கள் வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஊடகங்களை சந்திக்கும் அவர்கள், எல்லோரும் நிச்சயம் ஜனநாயகக் கடமை ஆற்ற வரவேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

வாக்குப்பதிவை முடித்த நடிகர்கள் சூர்யா, கார்த்தி தங்கள் கையில் அடையாள மையினை காட்டி விட்டு சிரித்த முகத்தோடு அங்கிருந்து கிளம்பினர்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE