'குக் வித் கோமாளி5’ வின்னராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா!

By KU BUREAU

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னராக பிரியங்கா அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி 5’ சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதன் டைட்டில் வின்னராக தொகுப்பாளினி பிரியங்கா அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு கோமாளியாக ராமர் வந்திருக்கிறார். டைட்டில் வின்னர் என்பதால் பிரியங்காவுக்கு ரூ. 5 லட்சமும், கோமாளியான ராமருக்கு ரூ. 1 லட்சமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஐந்தாவது சீசன் ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சையானதாகவே தொடங்கியது. நான்கு சீசன்களிலும் ஜட்ஜாக இருந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகி சன் டிவியில் துவங்கப்பட்ட சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு சென்றார். அவருக்குப் பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவரானார்.

அதேபோல, நான்கு சீசன்களிலும் கோமாளியாக இருந்த மணிமேகலை இந்த சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆனால், தன்னை தொகுப்பாளினி வேலை செய்ய விடாமல் பிரியங்கா டாமினேட் செய்வதாகவும் தன்னுடைய சுயமரியாதைக்காக நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாகவும் அவர் பேசியது பரபரப்பைக் கிளப்பியது.

பிரியங்கா, மணிமேகலை இருவருக்குமே ரசிகர்களிடையே ஆதரவு பெருகியது. இப்போது பிரியங்கா ‘குக் வித் கோமாளி5’ டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டதால், இந்த 'மணிமேகலை vs பிரியங்கா’ சர்ச்சையில் விஜய் டிவி பிரியங்காவை விட்டுக் கொடுக்கவில்லை என்றே பலரும் கூறி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE