வீட்டு வேலையாட்களுக்கு இருக்கும் மரியாதை கூட எனக்கில்லை - நடிகர் ஜெயம் ரவி வேதனை!

By KU BUREAU

வீட்டு வேலையாட்களுக்கு இருக்கும் மரியாதை கூட தனக்கில்லை என நடிகர் ஜெயம் ரவி வேதனை தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருந்தது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தன்னுடைய கவனத்திற்கு வராமலேயே தன்னிச்சையாக இந்த முடிவை ஜெயம் ரவி எடுத்திருப்பதாக அவரது மனைவி குற்றம் சாட்டியிருந்தார். இந்த விஷயம் பூதாகரமாக வெடித்த நிலையில், ஜெயம் ரவிக்கு பாடகி கெனிஷாவுடன் தொடர்பு என செய்தி கிளம்பியது. இதற்கு ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவருமே மறுத்திருந்தனர்.

இந்த நிலையில், தனது வீட்டு வேலையாட்களுக்கு கொடுக்கும் மரியாதை கூட தனக்கில்லை என ஜெயம் ரவி வேதனைப் பட்டிருக்கிறார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டியில், “எனக்கென தனியாக வங்கிக் கணக்கு கூட கிடையாது. சின்ன சின்ன செலவுகளுக்குக் கூட ஆர்த்தி என்னிடம் கேள்வி கேட்டு அவமானப்படுத்துவார். என் மாமியார் என்னை வைத்து தொடர்ந்து படங்களைத் தயாரித்தார். ஆனால், அவை அனைத்தும் நஷ்டம் என்பதுபோல கணக்குக் காட்டி ஏமாற்றினார்கள். வீட்டு வேலையாட்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட எனக்கில்லை” என புலம்பி இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE