கண்ணீர் விட்டு கதறியழுத சமந்தா... காரணம் இதுதான்!

By காமதேனு

ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா, திடீரென கண்கலங்கி அழுதுள்ளார். அதற்கான காரணத்தையும் சமந்தா கூறியுள்ளார்.

'எம்டியு ஹஸ்டில் சீசன் 3' என்ற ரியாலிட்டி ஷோ எம் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியின் நடுவராக நடிகை சமந்தா பங்கேற்றுள்ளார். பாப் பாடகர் பாட்ஷா நிகழ்ச்சியில் சமந்தாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் சமந்தாவின் உடை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியின் நடுவே சமந்தா கதறியழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் பாடகர் கிராவிட்டி, ‘ஜலாலுதீன்’ எனும் பாடலை பாடினார். அந்தப் பாடலை கேட்டவுடன் கண்கலங்கி அழுதுவிட்டார் சமந்தா. இந்த பாடலை கேட்டு சமந்தா ஏன் அழுதார் என பலருக்கும் கேள்வி எழுந்தது. அதற்கு காரணம் மையோசிடிஸ் நோயால் சமந்தா பாதிக்கப்பட்டு இருந்த போது அவருக்கு ஊக்கம் கொடுத்த பாடல் இதுதானாம். இதனால் தான் இந்த பாடலை கேட்டவுடன் அந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் திடீரென கண்கலங்கி அழுதுவிட்டார் சமந்தா.

இதையும் வாசிக்கலாமே...

இன்று டிஸ்சார்ஜ்.. முழுவதும் குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்!

இன்று முதல் சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு!

செங்கல்பட்டில் ரயில் தடம் புரண்டு விபத்து: அனைத்து ரயில்களும் தாமதம்!

WPL தொடரில் தமிழக வீராங்கனை... டாக்ஸி டிரைவரின் மகள் சாதனை!

காரை நொறுக்கிய டிரக்... புதுமணத் தம்பதி உட்பட 5 பேர் உயிரிழப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE