‘வேட்டையன்’ படத்தில் ரஜினி நடிப்பது தெரியாது - நடிகை மஞ்சு வாரியர் ஷாக் தகவல்!

By KU BUREAU

சென்னை: ‘வேட்டையன்’ படத்தின் கதை கேட்டபோது அதில் ரஜினிகாந்த் தான் நடிக்க இருக்கிறார் என்பது தனக்கு தெரியாது என நடிகை மஞ்சு வாரியர் பேசியிருக்கிறார்.

’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், மஞ்சுவாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழாவும் நடந்தது. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர் ‘வேட்டையன்’ படம் தொடர்பாக பேட்டி கொடுத்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில், “’விடுதலை’, ‘துணிவு’ போன்ற கதைகளை நான் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் ஹெச். வினோத்தான். இவர்களைப் போன்ற சிறந்த இயக்குநர்களது கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ’துணிவு’ படத்தில் நான் நடிக்க ஒத்துக் கொண்ட பிறகுதான் அதில் அஜித் நடிக்கிறார் எனத் தெரியும். இதேதான் ‘வேட்டையன்’ படத்திற்கும் நடந்தது. கதை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்ட பிறகுதான் ரஜினி சார் ஹீரோ எனத் தெரிந்தது. நான் ஆசைப்பட்ட இயக்குநர்கள் மட்டுமல்லாது, நடிகர்களுடனும் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி” எனக் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE